search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தந்தையுடன் யோகி ஆதித்யநாத்
    X
    தந்தையுடன் யோகி ஆதித்யநாத்

    உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை காலமானார்

    உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை டெல்லியில் இன்று காலமானார்.
    புதுடெல்லி:

    உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்த். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த ஆனந்த் சிங் பிஷ்த், தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, மார்ச் 15ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.

    இந்நிலையில் நேற்று அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இதனையடுத்து அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. டயாலிசிஸ் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் காலமானார். 
    Next Story
    ×