search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் - 3 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம்

    ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மற்றும் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர் அவர்கள் மீது குண்டுகள் வீசியும், துப்பாக்கியால் சுட்டும் திடீர் தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.  
    தொடர்ந்து பயங்கரவாதிகளை தேடும்  பணி நடந்து வருகிறது என சி.ஆர்.பி.எப். அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×