என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீங்கள் ரோட்டுக்கு வந்தால் நான் உங்கள் வீட்டுக்கு வருவேன்... கவனத்தை ஈர்த்த கொரோனா விழிப்புணர்வு
Byமாலை மலர்2 April 2020 3:58 AM GMT (Updated: 2 April 2020 3:58 AM GMT)
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் போக்குவரத்து போலீசார் சாலையில் எழுதி உள்ள கொரோனா விழிப்புணர்வு வாசகம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பெங்களூரு:
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். சிலர் கொரோனா குறித்த அச்சம் இன்றி தேவையற்ற காரணங்களுக்காக வெளியில் நடமாடுகின்றனர். சிலர் வாகனங்களிலும் பயணம் செய்கின்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி உரிய அறிவுரைகள் கூறி அனுப்புகின்றனர். தொடர்ந்து பல்வேறு வழிகளில் கொரோனா குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரு போக்குவரத்து போலீசார், வாகன ஓட்டிகளுக்கு எளிதில் புரியும் வகையில் நாகேனஹள்ளி செக்போஸ்ட்டில் கொரோனா விழிப்புணர்வு வாசகங்களை சாலையில் எழுதி வைத்துள்ளனர். நீங்கள் ரோட்டுக்கு வந்தால் நான் உங்கள் வீட்டுக்கு வருவேன்’ என எழுதப்பட்டுள்ளது. இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதேபோல் பல்வேறு இடங்களில் கொரோனா வைரசின் வடிவமைப்பு போன்று ஹெல்மெட் அணிந்தும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X