search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடியுடன் அவரது தாயார் ஹிராபா
    X
    பிரதமர் மோடியுடன் அவரது தாயார் ஹிராபா

    கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிரதமர் மோடியின் தாயார் ரூ.25 ஆயிரம் நிதியுதவி

    கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் பிரதமர் நிவாரண நிதிக்கு அவரது தாயார் ஹிராபா 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
    அகமதாபாத்:

    சீனாவில் தோன்றிய கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பாதிப்படைந்து வருகிறது. தினமும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து, அனைத்து நாடுகளும் கொரோனா வைரசில் இருந்து காத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன.

    இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாட்டு மக்கள் நிதி தந்து உதவலாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

    இதைத்தொடர்ந்து, பிரதமரின் நிவாரண நிதிக்கு முக்கிய பிரமுகர்கள், பெரிய கம்பெனிகள் நிதியுதவி அளித்து வருகின்றன.

    இந்நிலையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில், பிரதமர் நிவாரண நிதிக்கு அவரது தாயார் ஹிராபா தான் சேமித்து வைத்திருந்த 25 ஆயிரம் ரூபாய் நிதியை அளித்துள்ளார்.
    Next Story
    ×