search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதமர் நிவாரண நிதி"

    • பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து 7 பேருக்கு ரூ.13 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
    • பிரதமரின் தேசிய நிவாரண நிதியானது மாநிலங்களவை உறுப்பினர் பரிந்துரை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    நாமக்கல்:

    நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ராஜேஷ் குமார் பரிந்துரை அடிப் படையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை இதய வால்வு பிரச்சினை, சிறுநீரக பிரச்சினை, சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை ரத்த புற்றுநோய், மூச்சு குழாய் ஆஸ்துமா, வலிப்பு நோய், மார்பக புற்றுநோய் ஆகியவற்றிற்கான சிகிச்சைகளுக்காக பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து 7 பேருக்கு ரூ.13 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த 4 மாதங்களில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எட்டிமடை புதூரை சேர்ந்த வளர்மதி (வயது 51) என்பவருக்கு அறுவை சிகிச்சைக்காக ரூ.3 லட்சமும், நாமக்கல் முதலைப்பட்டியை சேர்ந்த லஷ்யா (6) என்பவருக்கு மூச்சு குழல் பாதிப்பு சரி செய்ய ரூ.50 ஆயிரம், திருச்செங்கோடு வட்டம் இலுப்புலி கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி (45) என்பவருக்கு வலிப்பு நோய் சிகிச்சைக்காக ரூ.50 ஆயிரம், சேலம் பஞ்சதாங்கி ஏரியை சேர்ந்த மூதாட்டி லட்சுமிக்கு ரத்த புற்றுநோய் சிகிச்சைக்காக ரூ.2.70 லட்சம், ராசிபுரம் மங்களபுரத்தைச் சேர்ந்த வருண் (10) என்ற சிறுவனுக்கு சிறுநீரக பாதிப்பு சிகிச்சைக்காக ரூ.3 லட்சம், சேந்தமங்கலத்தை சேர்ந்த பார்த்திபன் (52) என்பவருக்கு ரூ.3லட்சம், சேலம் சொர்ணபுரியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் (52) என்பவருக்கு மருத்துவ உதவிக்காக ரூ.50 ஆயிரம் என பிரதமரின் தேசிய நிவாரண நிதியானது மாநிலங்களவை உறுப்பினர் பரிந்துரை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×