என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை- இந்திய டாக்டர் கண்டுபிடிப்பு
Byமாலை மலர்28 March 2020 9:54 AM GMT (Updated: 28 March 2020 9:54 AM GMT)
கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்தக்கூடிய புதிய சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளதாக இந்திய டாக்டர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், இந்தியாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 19 பேர் இறந்துள்ளனர், 873 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் கொரோனா வைரசிற்கான தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், இந்தியாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 19 பேர் இறந்துள்ளனர், 873 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் கொரோனா வைரசிற்கான தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில், பெங்களூரில் உள்ள ஒரு டாக்டர் கொரோனாவுக்கு ஒரு சிறந்த சிகிச்சையை கண்டுபிடித்ததாகக் கூறியுள்ளார்.
கொரோனாவை குணமாக்க சிகிச்சை முறையை கண்டுபிடித்ததாக பெங்களூரு புற்றுநோய் நிபுணர் விஷால் ராவ் கூறியுள்ளார். இந்த வார இறுதிக்குள் இந்த சிகிச்சை பரிசோதனைக்கு தயாராக இருக்கும் என்று அவர் கூறி உள்ளார்.
நோயெதிர்ப்பு மண்டலம் சார்ஸ்-கோவ் -2 வைரஸ் காரணமாக பாதிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை முறை, நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்காக செயல்படும். இதனால் நோயாளியின் உடல் கொரோனா வைரஸுடன் வலுவாக போராடுகிறது. இந்த மருந்து கொரோனா வைரஸின் "தடுப்பூசி" அல்ல என்று அவர் கூறியுள்ளார்.
‘கொரோனா நோயாளிகளுக்கு அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்காக ஊசி மூலம் வழங்கக்கூடிய சைட்டோகைன்களை நாங்கள் தயாரித்துள்ளோம். இந்த ஆய்வில் நாங்கள் மிகவும் ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கிறோம். இதன் முதல் தொகுப்பு இந்த வார இறுதிக்குள் தயாராகும் என்று நம்புகிறோம்’ என்றும் டாக்டர் விஷால் ராவ் கூறியிருக்கிறார்.
கொரோனாவை குணமாக்க சிகிச்சை முறையை கண்டுபிடித்ததாக பெங்களூரு புற்றுநோய் நிபுணர் விஷால் ராவ் கூறியுள்ளார். இந்த வார இறுதிக்குள் இந்த சிகிச்சை பரிசோதனைக்கு தயாராக இருக்கும் என்று அவர் கூறி உள்ளார்.
நோயெதிர்ப்பு மண்டலம் சார்ஸ்-கோவ் -2 வைரஸ் காரணமாக பாதிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை முறை, நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்காக செயல்படும். இதனால் நோயாளியின் உடல் கொரோனா வைரஸுடன் வலுவாக போராடுகிறது. இந்த மருந்து கொரோனா வைரஸின் "தடுப்பூசி" அல்ல என்று அவர் கூறியுள்ளார்.
‘கொரோனா நோயாளிகளுக்கு அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்காக ஊசி மூலம் வழங்கக்கூடிய சைட்டோகைன்களை நாங்கள் தயாரித்துள்ளோம். இந்த ஆய்வில் நாங்கள் மிகவும் ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கிறோம். இதன் முதல் தொகுப்பு இந்த வார இறுதிக்குள் தயாராகும் என்று நம்புகிறோம்’ என்றும் டாக்டர் விஷால் ராவ் கூறியிருக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X