என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தடுப்பு போருக்கு தயார்- தேசிய பேரிடர் மீட்பு படை அறிவிப்பு
Byமாலை மலர்28 March 2020 4:29 AM GMT (Updated: 28 March 2020 4:29 AM GMT)
நாட்டை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொடர்பான அவசரகால பணிகளுக்கு தயாராக இருப்பதாக தேசிய பேரிடர் மீட்பு படை அறிவித்துள்ளது.
கொல்கத்தா:
பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுவதற்காக, தேசிய பேரிடர் மீட்புப்படை செயல்பட்டு வருகிறது. 12 படைப்பிரிவுகளாக, மொத்தம் 13 ஆயிரத்து 800 வீரர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்நிலையில், தற்போது நாட்டை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொடர்பான அவசரகால பணிகளுக்கு தயாராக இருப்பதாக தேசிய பேரிடர் மீட்பு படை கூறியுள்ளது.
இதுகுறித்து அதன் தலைமை இயக்குனர் எஸ்.என்.பிரதான் கூறியதாவது:-
கொரோனாவுக்காக மாநில அரசுகள் உருவாக்கிய மாநில கட்டுப்பாட்டு அறைகளில் தேசிய பேரிடர் மீட்பு படை முகாமிட்டுள்ளது. தேவைப்படும்போது எங்களை அழைக்குமாறு அனைத்து மாநில அரசுகளின் தலைமை செயலாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். எங்களை மாநில அரசுகள் அழைக்கும்போது, போருக்கு செல்வதுபோல் தயாராவோம்.
தற்போது, பீகார், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் எங்களை அழைத்துள்ளன. ஒரு படைப்பிரிவுக்கு 84 வீரர்கள் வீதம் சிறிய குழுக்களை அமைத்துள்ளோம். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை குறித்து இதர படைகளை சேர்ந்த 28 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுவதற்காக, தேசிய பேரிடர் மீட்புப்படை செயல்பட்டு வருகிறது. 12 படைப்பிரிவுகளாக, மொத்தம் 13 ஆயிரத்து 800 வீரர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்நிலையில், தற்போது நாட்டை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொடர்பான அவசரகால பணிகளுக்கு தயாராக இருப்பதாக தேசிய பேரிடர் மீட்பு படை கூறியுள்ளது.
இதுகுறித்து அதன் தலைமை இயக்குனர் எஸ்.என்.பிரதான் கூறியதாவது:-
கொரோனாவுக்காக மாநில அரசுகள் உருவாக்கிய மாநில கட்டுப்பாட்டு அறைகளில் தேசிய பேரிடர் மீட்பு படை முகாமிட்டுள்ளது. தேவைப்படும்போது எங்களை அழைக்குமாறு அனைத்து மாநில அரசுகளின் தலைமை செயலாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். எங்களை மாநில அரசுகள் அழைக்கும்போது, போருக்கு செல்வதுபோல் தயாராவோம்.
தற்போது, பீகார், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் எங்களை அழைத்துள்ளன. ஒரு படைப்பிரிவுக்கு 84 வீரர்கள் வீதம் சிறிய குழுக்களை அமைத்துள்ளோம். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை குறித்து இதர படைகளை சேர்ந்த 28 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X