என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா: தனிமைபடுத்தல் கட்டுப்பாட்டை மீறி சொந்த ஊர் சென்ற சப்-கலெக்டர் சஸ்பெண்ட்
Byமாலை மலர்27 March 2020 10:11 PM GMT (Updated: 28 March 2020 1:48 AM GMT)
கொரோனா தனிமைபடுத்தல் கட்டுப்பாட்டை மீறி சொந்த ஊர் சென்ற சப்-கலெக்டர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட சப்-கலெக்டராக பணியாற்றி வந்தவர் அனுபம் சர்மா. இவரது சொந்த ஊர் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் ஆகும்.
அனுபம் சர்மா சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா ஆகிய வெளிநாடுகளுக்கு சென்று விட்டு கடந்த 19-ம் தேதி தான் பணி செய்யும் கேரளா மாநிலம் திரும்பியுள்ளார்.
வெளிநாடு சென்றுவந்த சர்மாவை கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்லத்தில் உள்ள அவரது அரசு குடியிருப்பில் 14 நாட்கள் தனிமையில் இருக்க கேரள மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
ஆனால், தனிமைபடுத்தல் கட்டுப்பாட்டை மீறிய அனுபம் சர்மா 19-ம் தேதியே அதிகாரிகள் யாருக்கும் எந்த வித தகவலும் தெரிவிக்காமல் கொல்லத்தில் இருந்து தனது சொந்த ஊரான உத்தரபிரதேச மாநிலம் கான்பூருக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் விதித்த உத்தரவை மீறி அனுபம் சர்மா தனது சொந்த ஊருக்கு சென்றது கேரள அதிகாரிகள் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட கொல்லம் கலெக்டர் தனிமைபடுத்தல் கட்டுப்பாட்டை மீறிய சர்மா குறித்து கேரள அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில் சப்-கலெக்டர் அனுபம் சர்மா அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் தனிமைபடுத்தல் கட்டுப்பாட்டை மீறி சொந்த ஊர் சென்றது உறுதிபடுத்தப்பட்டது.
இதையடுத்து, தனிமைபடுத்த கட்டுப்பாட்டை மீறிய அனுபம் சர்மாவை சப்-கலெக்டர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X