என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராகுல் காந்தியின் துணை கேள்வியை சபாநாயகர் அனுமதிக்காததால் காங்கிரஸ் வெளிநடப்பு
Byமாலை மலர்16 March 2020 8:11 AM GMT (Updated: 16 March 2020 8:11 AM GMT)
வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்தவர்கள் தொடர்பாக மக்களவையில் ராகுல் காந்தி எழுப்பிய துணை கேள்விக்கு சபாநாயகர் அனுமதி அளிக்காததால் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் வங்கிகளில் கடன் பெற்று வேண்டுமென்றே திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தவர்கள் தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்கான பதிலை நிதித்துறை இணை மந்திரி தாக்குர் அளித்த பின்னர் துணை கேள்வி ஒன்றையும் ராகுல் காந்தி எழுப்பினார்.
சபாநாயகரின் இந்த முடிவுக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்தார். இதை தொடர்ந்து ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி, எனது கேள்வியை சபாநாயகர் அனுமதிக்காதது ஒரு பாராளுமன்ற உறுப்பினரான என்னுடைய உரிமையை பறிக்கும் செயலாகும். சபாநாயகரின் இந்த நடவடிக்கையால் நான் வேதனை அடைந்துள்ளேன்.
வங்கிகளில் கடன் பெற்று வேண்டுமென்றே திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தவர்களின் பெயர்களை வெளியிட இந்த அரசு ஏன் அஞ்சுகிறது? என்பது புரியவில்லை என்று குறிப்பிட்டார்.
பாராளுமன்ற மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் வங்கிகளில் கடன் பெற்று வேண்டுமென்றே திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தவர்கள் தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்கான பதிலை நிதித்துறை இணை மந்திரி தாக்குர் அளித்த பின்னர் துணை கேள்வி ஒன்றையும் ராகுல் காந்தி எழுப்பினார்.
ஆனால், கேள்வி நேரம் காலை 11 மணிக்கு தொடங்கி நன்பகலுடன் நிறைவடைந்ததாக குறிப்பிட்ட சபாநாயகர் ஓம் பிர்லா, ராகுல் காந்தியின் துணை கேள்வியை அனுமதிக்க மறுத்து விட்டார்.
சபாநாயகரின் இந்த முடிவுக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்தார். இதை தொடர்ந்து ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி, எனது கேள்வியை சபாநாயகர் அனுமதிக்காதது ஒரு பாராளுமன்ற உறுப்பினரான என்னுடைய உரிமையை பறிக்கும் செயலாகும். சபாநாயகரின் இந்த நடவடிக்கையால் நான் வேதனை அடைந்துள்ளேன்.
வங்கிகளில் கடன் பெற்று வேண்டுமென்றே திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தவர்களின் பெயர்களை வெளியிட இந்த அரசு ஏன் அஞ்சுகிறது? என்பது புரியவில்லை என்று குறிப்பிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X