என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிர்பயா குற்றவாளிகளுக்கு 20-ந்தேதி தூக்கு தண்டனை
Byமாலை மலர்5 March 2020 9:25 AM GMT (Updated: 5 March 2020 10:06 AM GMT)
நிர்பயா வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் வருகிற 20-ந்தேதி காலை தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி:
கடந்த 2012-ம் ஆண்டு நண்பருடன் பேருந்தில் சென்ற மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முகேஷ் சிங், வினய், பவன் குமார், அக்ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களுக்கு மார்ச் 3-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தது. ஆனால் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தாவின் கருணை மனு நிலுவையில் இருந்ததால் தண்டனையை நிறைவேற்ற டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
அதன்பின்னர் பவன் குமார் குப்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார்.
இதையடுத்து குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடும் புதிய தேதியை அறிவிக்கக் கோரி திகார் சிறை நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம் குற்றவாளிகளை மார்ச் 20-ந்தேதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிட உத்தரவிட்டுள்ளது.
மூன்று முறை தூக்கு தண்டனை நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் நான்காவது முறையாக தூக்கு தண்டனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2012-ம் ஆண்டு நண்பருடன் பேருந்தில் சென்ற மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முகேஷ் சிங், வினய், பவன் குமார், அக்ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களுக்கு மார்ச் 3-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தது. ஆனால் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தாவின் கருணை மனு நிலுவையில் இருந்ததால் தண்டனையை நிறைவேற்ற டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
அதன்பின்னர் பவன் குமார் குப்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார்.
இதையடுத்து குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடும் புதிய தேதியை அறிவிக்கக் கோரி திகார் சிறை நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம் குற்றவாளிகளை மார்ச் 20-ந்தேதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிட உத்தரவிட்டுள்ளது.
மூன்று முறை தூக்கு தண்டனை நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் நான்காவது முறையாக தூக்கு தண்டனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X