என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அனைத்து மில் தொழிலாளர்களுக்கும் வீடு வழங்க நடவடிக்கை: உத்தவ் தாக்கரே
Byமாலை மலர்2 March 2020 2:03 AM GMT (Updated: 2 March 2020 2:03 AM GMT)
அனைத்து மில் தொழிலாளர்களுக்கும் வீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
மும்பை :
மும்பையில் மில் தொழிலாளர்களுக்காக மகாடா சார்பில் 3 ஆயிரத்து 894 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளை வாங்க 1 லட்சத்து 74 ஆயிரத்து 36 மில் தொழிலாளர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 3 ஆயிரத்து 894 வீடுகளுக்கான பயனாளர்களை தேர்ந்தெடுக்கும் மகாடா குலுக்கல் நேற்று லோயர் பரேலில் நடந்தது. இந்த விழாவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, வீட்டு வசதித்துறை மந்திரி ஜித்தேந்திர அவாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசியதாவது:-
உங்களுக்கான (மில் தொழிலாளர்கள்) வீடுகள் ஒதுக்கப்பட்டவுடன் ‘டீ' குடிக்க என்னை கூப்பிடுங்கள். அந்த வீட்டில் நீங்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். உங்களுக்கு ஒதுக்கப்படும் வீடுகளை விற்றுவிட்டு மும்பைக்கு வெளியில் குடியேறி அதன் மீதான உரிமையை இழந்துவிட வேண்டாம்.
ஒருங்கிணைந்த மராட்டியத்திற்காக மில் தொழிலாளர்கள் அதிக பங்களிப்பை அளித்துள்ளனர். எனவே மாநிலத்தில் உள்ள அனைத்து மில் தொழிலாளர்களுக்கும் வீடு கட்டி கொடுக்கும் வழிமுறைகளை அரசு கண்டறியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மும்பையில் மில் தொழிலாளர்களுக்காக மகாடா சார்பில் 3 ஆயிரத்து 894 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளை வாங்க 1 லட்சத்து 74 ஆயிரத்து 36 மில் தொழிலாளர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 3 ஆயிரத்து 894 வீடுகளுக்கான பயனாளர்களை தேர்ந்தெடுக்கும் மகாடா குலுக்கல் நேற்று லோயர் பரேலில் நடந்தது. இந்த விழாவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, வீட்டு வசதித்துறை மந்திரி ஜித்தேந்திர அவாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசியதாவது:-
உங்களுக்கான (மில் தொழிலாளர்கள்) வீடுகள் ஒதுக்கப்பட்டவுடன் ‘டீ' குடிக்க என்னை கூப்பிடுங்கள். அந்த வீட்டில் நீங்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். உங்களுக்கு ஒதுக்கப்படும் வீடுகளை விற்றுவிட்டு மும்பைக்கு வெளியில் குடியேறி அதன் மீதான உரிமையை இழந்துவிட வேண்டாம்.
ஒருங்கிணைந்த மராட்டியத்திற்காக மில் தொழிலாளர்கள் அதிக பங்களிப்பை அளித்துள்ளனர். எனவே மாநிலத்தில் உள்ள அனைத்து மில் தொழிலாளர்களுக்கும் வீடு கட்டி கொடுக்கும் வழிமுறைகளை அரசு கண்டறியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X