என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் வெளிநாடு செல்ல டெல்லி கோர்ட் அனுமதி
Byமாலை மலர்22 Feb 2020 10:59 AM GMT (Updated: 22 Feb 2020 10:59 AM GMT)
காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் வெளிநாடு செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
புதுடெல்லி:
காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014-ம் ஆண்டு டெல்லி ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுதொடர்பாக சசிதரூர் மீது கொலை மற்றும் வன்முறை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற சசிதரூக்கு முன் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்ற நிபந்தனையை விதித்திருந்தது.
இதற்கிடையே, காங்கிரஸ் எம்.பி சசிதரூர், நார்வே மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்று டெல்லி கோர்ட்டில் முன் அனுமதி கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், இந்த மனு இன்று நீதிபதி அஜய்குமார் குஹர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டார். மேலும், 3 மாதங்கள் அவர் வெளிநாட்டில் தங்கியிருக்க அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X