என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு - கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி
Byமாலை மலர்18 Feb 2020 4:19 PM GMT (Updated: 18 Feb 2020 4:19 PM GMT)
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிவகங்கை தொகுதி எம்.பி.யான கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
புதுடெல்லி:
சிவகங்கை தொகுதி எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் மீது ஏர்செல்-மேக்சிஸ், ஐ.என்.எக்ஸ் மீடியா உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள இந்த வழக்குகளில் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்திக் சிதம்பரம் தாக்கல் செய்த மனுவில் டென்னிஸ் போட்டிக்காக லண்டன் மற்றும் பிரான்ஸ் செல்ல இரண்டு வாரம் அனுமதி கோரி இருந்தார்.
இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், லண்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு செல்ல கார்த்தி சிதம்பரத்துக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. மேலும், அவரது பயணத்தின் விவரங்களின் நகலை சிபிஐயிடம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X