search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலியானவர்களை படத்தில் காணலாம்
    X
    பலியானவர்களை படத்தில் காணலாம்

    திருவனந்தபுரத்தில் கள்ளக்காதலியை கொன்று விட்டு காதலன் தற்கொலை

    திருவனந்தபுரத்தில் கள்ளக்காதலியை கொலை செய்து விட்டு காதலன் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்தவர் ஷினு (வயது38).

    ஷினுவுக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர்களின் வீடு அருகே வசித்து வருபவர் பிஜூ. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். பிஜூவின் மனைவி சாந்திகிருஷ்ணா(36). இவர்களுக்கும் 2 குழந்தை உள்ளனர்.

    பக்கத்து வீடு என்பதால் ஷினுவுக்கும், சாந்திகிருஷ்ணாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. அக்கம் பக்கத்தினர் இவர்களை கண்டித்தனர்.

    இந்த நிலையில் ஷினுவின் குடும்பத்தினர் நேற்று வெளியே சென்றனர். வீட்டில் ஷினு மட்டும் தனியாக இருந்தார். மதியம் குடும்பத்தினர் வீடு திரும்பினர். வீட்டிற்குள் சென்று பார்த்த போது ஷினு தூக்குப்போட்டு இறந்து கிடந்தார்.

    அதிர்ச்சி அடைந்த அவர்கள் அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் ஆற்றிங்கல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    ஷினு தற்கொலை செய்த தகவல் வெளியான சிறிது நேரத்தில் அவரது கள்ளக்காதலி சாந்தி கிருஷ்ணாவின் பெற்றோரும் அவர்களின் வீட்டில் இருந்து அலறினர். சத்தம் கேட்டு போலீசார் அங்குச் சென்று பார்த்த போது சாந்தி கிருஷ்ணாவும் வீட்டில் இறந்து கிடந்தார்.

    போலீசார் விசாரணை நடத்தியதில், சாந்தி கிருஷ்ணா கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. சாந்தி கிருஷ்ணாவை ஷினு கொலை செய்து விட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதினர். இருவரின் உடலும் கைப்பற்றப்பட்டு திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோ தனைக்கு அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×