என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
2 கோடி மக்களும் எனது குடும்பம்தான்- கெஜ்ரிவால் பேச்சு
புதுடெல்லி:
டெல்லி முதல் மந்திரியாக 3-வது முறையாக பதவி ஏற்ற பிறகு கெஜ்ரிவால் பேசியதாவது:-
டெல்லியில் உள்ள 2 கோடி மக்களும் எனது குடும்பத்தினர்தான். டெல்லியின் மகன் முதல்-மந்தியாக பதவி ஏற்றுள்ளதால் மக்கள் கவலைப்பட தேவையில்லை. இது எனது வெற்றி அல்ல மக்களாகிய உங்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.
டெல்லியின் வளர்ச்சிக்காக நான் பாடுபட்டேன். கட்சி, மதம், சாதி பாகுபாடு பார்க்காமல் 5 ஆண்டுகள் அனைவருக்காகவும் பாடுபட்டேன்.
டெல்லியின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடியின் உதவியை எதிர்பார்க்கிறேன்.
வாழ்க்கையில் அத்தியாவசியமானவை அனைத்தும் இலவசமே, டெல்லியில் நேர்முறை அரசியலை முன்னெடுத்து செல்வேன். மத்திய அரசுடன் இணைந்து டெல்லியை நம்பர் ஒன் நகரமாக மாற்றுவேன்.
மோடியின் ஆசியுடன் நல்ல முறையில் ஆட்சியை கொண்டு செல்வேன். மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. மருத்துவத்திற்கு வரும் நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்க மாட்டோம்.
இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்