என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆம் ஆத்மி கட்சியில் ஒரே நாளில் 11 லட்சம் பேர் இணைந்தனர்
Byமாலை மலர்14 Feb 2020 2:11 AM GMT (Updated: 14 Feb 2020 2:11 AM GMT)
தேர்தல் முடிந்து வெற்றி நிலவரங்கள் அறிவிக்கப்பட்ட ஒரே நாளில் ஆம் ஆத்மி கட்சியில் 11 லட்சம் பேர் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் அனைவரும் ‘மிஸ்டு கால்’ மூலம் தங்கள் இணைப்பை உறுதி செய்துள்ளனர்.
புதுடெல்லி :
டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதன் மூலம் டெல்லியில் தொடர்ந்து 3-வது முறையாக அக்கட்சி ஆட்சி அமைக்கிறது.
இந்த நிலையில் தேர்தல் முடிந்து வெற்றி நிலவரங்கள் அறிவிக்கப்பட்ட ஒரே நாளில் ஆம் ஆத்மி கட்சியில் 11 லட்சம் பேர் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் அனைவரும் ‘மிஸ்டு கால்’ மூலம் தங்கள் இணைப்பை உறுதி செய்துள்ளனர்.
இதை உறுதிபடுத்தும் விதமாக டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வெற்றி நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு ஒரு நாள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், அமோக வெற்றியைப் பார்த்து 11 லட்சம் மக்கள் நமது கட்சியில் இணைந்துள்ளனர். இது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஆம் ஆத்மி கட்சியை நாடு முழுவதும் வலுப்பெறச் செய்யும் விதமாக ராஷ்டிர நிர்மான் என்ற பிரசாரத்தை அந்த கட்சி தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதன் மூலம் டெல்லியில் தொடர்ந்து 3-வது முறையாக அக்கட்சி ஆட்சி அமைக்கிறது.
இந்த நிலையில் தேர்தல் முடிந்து வெற்றி நிலவரங்கள் அறிவிக்கப்பட்ட ஒரே நாளில் ஆம் ஆத்மி கட்சியில் 11 லட்சம் பேர் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் அனைவரும் ‘மிஸ்டு கால்’ மூலம் தங்கள் இணைப்பை உறுதி செய்துள்ளனர்.
இதை உறுதிபடுத்தும் விதமாக டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வெற்றி நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு ஒரு நாள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், அமோக வெற்றியைப் பார்த்து 11 லட்சம் மக்கள் நமது கட்சியில் இணைந்துள்ளனர். இது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஆம் ஆத்மி கட்சியை நாடு முழுவதும் வலுப்பெறச் செய்யும் விதமாக ராஷ்டிர நிர்மான் என்ற பிரசாரத்தை அந்த கட்சி தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X