search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கள்ளக்காதல் விவகாரத்தில் டி.வி. நடிகை கொலை - கணவரே எரித்து கொன்றார்

    சண்டிகர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் டிவி நடிகையை கணவரே எரித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் அனிதா சிங்.

    தன்னுடன் பணி புரிந்த ஒருவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டார். இதனை கண்டுபிடித்த அவரது கணவர் ரவீந்திர், மனைவியை விருந்துக்காக தனது நண்பர் வீட்டிற்கு அழைத்து சென்றார். உணவில் மயக்க மருந்து கலந்து கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

    15 நாட்களுக்குப் பின்னர் அனிதா சிங்கின் உடல் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

    மனைவி கள்ளக்காதலில் ஈடுபட்டு இருப்பார் என்ற சந்தேகத்தில் கொலை செய்ததாகவும், இந்த கொலைக்கு தனது நண்பரும் உதவி செய்ததாகவும் ரவீந்தர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து அவரது நண்பர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×