என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பணமதிப்பிழப்பு உள்ளிட்ட 3 தவறுகளால் பொருளாதாரம் அந்தரத்தில் தொங்குகிறது - ப.சிதம்பரம் கருத்து
Byமாலை மலர்6 Feb 2020 12:26 AM GMT (Updated: 6 Feb 2020 12:26 AM GMT)
பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. , வங்கிகளை நசுக்கியது ஆகிய மூன்று பெரும் தவறுகளால், பொருளாதாரம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது என முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
டெல்லியில் உள்ள ஸ்ரீராம் கல்லூரியில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் மாணவர்களிடையே பேசினார். அவர் பேசியதாவது:-
மத்திய அரசு, 10 சதவீத பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று கூறுகிறது. ஆனால், உண்மையிலேயே வளர்ச்சி 5 சதவீதம்தான் இருக்கும். தொடர்ந்து 6 காலாண்டுகளாக வளர்ச்சி விகிதம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. 7-வது காலாண்டிலும் வீழ்ச்சி ஏற்பட்டால், வீழ்ச்சி தொடரும் என்றும், நாம் மீள்வது கடினம் என்றும் அர்த்தம்.
நாம் நொண்டி அடித்துக் கொண்டுதான் இருப்போம். பணமதிப்பிழப்பு, குறைபாடான ஜி.எஸ்.டி. அமலாக்கம், வங்கிகளை நசுக்கியது ஆகிய மூன்று பெரும் தவறுகளால், பொருளாதாரம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.
கம்பெனி வரியை குறைப்பதற்கு பதிலாக, ஜி.எஸ்.டி. வரியை குறைத்திருந்தால், லட்சக்கணக்கானோர் கைகளில் பணம் புழங்கி, முதலீட்டுக்கு வழிவகுத்து இருக்கும். மக்கள் கைகளில் பணம் புழங்க நூறு நாள் வேலை திட்டம், விவசாயிகள் நிதி உதவி திட்டம் போன்றவற்றில் அதிக பணத்தை போட்டு இருக்கலாம். ஆனால், அவற்றுக்கு ஒதுக்கீட்டை குறைத்துள்ளனர். இதனால், பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்டும் வாய்ப்பை மத்திய அரசு தவற விட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
டெல்லியில் உள்ள ஸ்ரீராம் கல்லூரியில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் மாணவர்களிடையே பேசினார். அவர் பேசியதாவது:-
மத்திய அரசு, 10 சதவீத பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று கூறுகிறது. ஆனால், உண்மையிலேயே வளர்ச்சி 5 சதவீதம்தான் இருக்கும். தொடர்ந்து 6 காலாண்டுகளாக வளர்ச்சி விகிதம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. 7-வது காலாண்டிலும் வீழ்ச்சி ஏற்பட்டால், வீழ்ச்சி தொடரும் என்றும், நாம் மீள்வது கடினம் என்றும் அர்த்தம்.
நாம் நொண்டி அடித்துக் கொண்டுதான் இருப்போம். பணமதிப்பிழப்பு, குறைபாடான ஜி.எஸ்.டி. அமலாக்கம், வங்கிகளை நசுக்கியது ஆகிய மூன்று பெரும் தவறுகளால், பொருளாதாரம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.
கம்பெனி வரியை குறைப்பதற்கு பதிலாக, ஜி.எஸ்.டி. வரியை குறைத்திருந்தால், லட்சக்கணக்கானோர் கைகளில் பணம் புழங்கி, முதலீட்டுக்கு வழிவகுத்து இருக்கும். மக்கள் கைகளில் பணம் புழங்க நூறு நாள் வேலை திட்டம், விவசாயிகள் நிதி உதவி திட்டம் போன்றவற்றில் அதிக பணத்தை போட்டு இருக்கலாம். ஆனால், அவற்றுக்கு ஒதுக்கீட்டை குறைத்துள்ளனர். இதனால், பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்டும் வாய்ப்பை மத்திய அரசு தவற விட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X