என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 5 பேர் படுகாயம்
Byமாலை மலர்2 Feb 2020 9:26 AM GMT (Updated: 2 Feb 2020 9:34 AM GMT)
காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் இரு பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.
ஸ்ரீநகர்:
காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்துக்குட்பட்ட லால் சவுக் அருகாமையில் உள்ள பிரதாப் பார்க் பகுதியில் இன்று பிற்பகல் வழக்கம்போல் மத்திய துணை ராணுவப் படையினர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த சில பயங்கரவாதிகள் அவர்கள் மீது கையெறி குண்டை வீசிவிட்டு தப்பியோடினர். இந்த தாக்குதலில் இரு பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்ற பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.
காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்துக்குட்பட்ட லால் சவுக் அருகாமையில் உள்ள பிரதாப் பார்க் பகுதியில் இன்று பிற்பகல் வழக்கம்போல் மத்திய துணை ராணுவப் படையினர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த சில பயங்கரவாதிகள் அவர்கள் மீது கையெறி குண்டை வீசிவிட்டு தப்பியோடினர். இந்த தாக்குதலில் இரு பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்ற பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X