search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போர் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தும் பிரதமர் மோடி
    X
    போர் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தும் பிரதமர் மோடி

    டெல்லி போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து பிரதமர் மோடி மரியாதை

    குடியரசு தினமான இன்று, டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் நரேந்திர மோடி உயிர்நீத்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
    புதுடெல்லி:

    71-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் அங்குள்ள கவர்னர்கள் தேசிய கொடியேற்றி வைத்தனர்.

    இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று டெல்லியில்  உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் நரேந்திர மோடி உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கும் உடனிருந்தார்.

    அவரை தொடர்ந்து முப்படை அதிகாரிகளும் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
    Next Story
    ×