என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஹலோ எப்.எம்.க்கு மத்திய அரசு விருது
Byமாலை மலர்8 Jan 2020 4:39 AM GMT (Updated: 8 Jan 2020 4:39 AM GMT)
யோகாவை மக்களிடம் சிறப்பாக கொண்டு சேர்த்ததற்காக ஹலோ எப்.எம்.க்கு மத்திய அரசு விருது வழங்கப்பட்டது. டெல்லியில் நடந்த விழாவில் ஹலோ எப்.எம். இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தனிடம் விருதை மத்திய மந்திரி வழங்கினார்.
புதுடெல்லி:
சர்வதேச யோகா தின ஊடக விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான சி.கே.பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்ட 6 பேர் அடங்கிய குழு இந்த விருதுக்கு உரிய ஊடக நிறுவனங்களை தேர்வு செய்து இருந்தது.
நாடு முழுவதும் உள்ள 11 வானொலி நிலையங்கள், 11 நாளிதழ்கள் மற்றும் 8 தொலைக்காட்சிகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. டெல்லி மீடியா சென்டரில் உள்ள அரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவ்டேகர் தலைமை தாங்கினார்.
யோகாவை சிறப்பாக நாட்டு மக்களிடம் கொண்டு சேர்த்ததற்காக ஹலோ எப்.எம்.க்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை ஹலோ எப்.எம். இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தனிடம் ஆயுஷ் துறை மந்திரி ஸ்ரீபாத யஷோ நாயக் வழங்கினார். விருது சான்றிதழை ஹலோ எப்.எம்.க்கு மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் வழங்கினார். அப்போது ஹலோ எப்.எம். தலைமை செயல்பாட்டு அதிகாரி ராஜீவ் நம்பியார் உடனிருந்தார்.
விழாவில் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளர் ரவி மித்தல், தேர்வுக்குழு தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி சி.கே.பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சர்வதேச யோகா தின ஊடக விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான சி.கே.பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்ட 6 பேர் அடங்கிய குழு இந்த விருதுக்கு உரிய ஊடக நிறுவனங்களை தேர்வு செய்து இருந்தது.
நாடு முழுவதும் உள்ள 11 வானொலி நிலையங்கள், 11 நாளிதழ்கள் மற்றும் 8 தொலைக்காட்சிகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. டெல்லி மீடியா சென்டரில் உள்ள அரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவ்டேகர் தலைமை தாங்கினார்.
யோகாவை சிறப்பாக நாட்டு மக்களிடம் கொண்டு சேர்த்ததற்காக ஹலோ எப்.எம்.க்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை ஹலோ எப்.எம். இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தனிடம் ஆயுஷ் துறை மந்திரி ஸ்ரீபாத யஷோ நாயக் வழங்கினார். விருது சான்றிதழை ஹலோ எப்.எம்.க்கு மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் வழங்கினார். அப்போது ஹலோ எப்.எம். தலைமை செயல்பாட்டு அதிகாரி ராஜீவ் நம்பியார் உடனிருந்தார்.
விழாவில் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளர் ரவி மித்தல், தேர்வுக்குழு தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி சி.கே.பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X