search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் பலியானவர்கள்.
    X
    விபத்தில் பலியானவர்கள்.

    வைக்கம் அருகே இன்று காலை விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

    கேரள மாநிலம் வைக்கம் அருகே இன்று காலை கார் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகினர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் கோட்டயம் வைக்கத்தை சேர்ந்தவர் லிங்கராஜன். இவரது மனைவி கிரிஷா. இவர்களது மகன் சுரஜ். உறவினர் அஜிதா. இவர்கள் 4 பேரும் இன்று அதிகாலை காரில் கோட்டயம் புறப்பட்டனர்.

    காலை 5 மணிக்கு அங்குள்ள பேரும்சுவடி என்ற ஆத்துப்பாலத்தில் வந்தபோது எதிரே தனியார் பஸ் வந்தது. பஸ் வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதி அதன் மீது ஏறியது. இது குறித்து தகவல் தெரிந்ததும் கோட்டயம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பஸ்சை நகர்த்தினர்.

    காரை வெட்டி அதில் இருந்த 4 பேரையும் மீட்டபோது அவர்கள் உடல் நசுங்கி ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. 4 பேரில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வைக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×