என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வரி செலுத்தாதவர்களுக்கான சமரச திட்டம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு
Byமாலை மலர்4 Jan 2020 2:55 AM GMT (Updated: 4 Jan 2020 2:55 AM GMT)
வருமான வரி குற்றங்கள், வரி ஏய்ப்பு ஆகியவற்றில் ஈடுபட்டவர்களுக்கு வழக்குகளில் இருந்து நிவாரணம் அளிக்கும் சமரச திட்ட கால அவகாசத்தை ஜனவரி 31-ந் தேதி வரை நீட்டித்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவு பிறப்பித்தது.
புதுடெல்லி :
வருமான வரி குற்றங்கள், வரி ஏய்ப்பு ஆகியவற்றில் ஈடுபட்டவர்களுக்கு வழக்குகளில் இருந்து நிவாரணம் அளிக்கும் சமரச திட்டம், கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. இதன்படி, வருமான வரி குற்றங்களில் ஈடுபட்டவர்களில் தகுதி உடையவர்கள் மட்டும் உரிய வரி மற்றும் கூடுதல் வரி செலுத்தி, வழக்குகளில் இருந்து தப்பிக்கலாம்.
ஆனால், கடுமையான வரி ஏய்ப்பு, பொருளாதார குற்றம், பயங்கரவாத நிதி உதவி, வெளிநாட்டு சொத்து குவிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு இது பொருந்தாது.
இந்த திட்டம், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடியது. கடந்த டிசம்பர் 31-ந் தேதியுடன் இதற்கான கால அவகாசம் முடிவடைந்தது.
இந்நிலையில், கால அவகாசத்தை ஜனவரி 31-ந் தேதி வரை நீட்டித்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. திட்டத்துக்கு விண்ணப்பிப்பதில் உள்ள சிரமங்கள் குறித்து புகார்கள் வந்ததால், கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக வாரியம் கூறியுள்ளது.
வருமான வரி குற்றங்கள், வரி ஏய்ப்பு ஆகியவற்றில் ஈடுபட்டவர்களுக்கு வழக்குகளில் இருந்து நிவாரணம் அளிக்கும் சமரச திட்டம், கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. இதன்படி, வருமான வரி குற்றங்களில் ஈடுபட்டவர்களில் தகுதி உடையவர்கள் மட்டும் உரிய வரி மற்றும் கூடுதல் வரி செலுத்தி, வழக்குகளில் இருந்து தப்பிக்கலாம்.
ஆனால், கடுமையான வரி ஏய்ப்பு, பொருளாதார குற்றம், பயங்கரவாத நிதி உதவி, வெளிநாட்டு சொத்து குவிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு இது பொருந்தாது.
இந்த திட்டம், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடியது. கடந்த டிசம்பர் 31-ந் தேதியுடன் இதற்கான கால அவகாசம் முடிவடைந்தது.
இந்நிலையில், கால அவகாசத்தை ஜனவரி 31-ந் தேதி வரை நீட்டித்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. திட்டத்துக்கு விண்ணப்பிப்பதில் உள்ள சிரமங்கள் குறித்து புகார்கள் வந்ததால், கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக வாரியம் கூறியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X