என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அடுத்த ஆண்டு சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும் - நிர்மலா சீதாராமன்
Byமாலை மலர்31 Dec 2019 10:54 AM GMT (Updated: 31 Dec 2019 10:54 AM GMT)
தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், அடுத்த ஆண்டில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
உள் கட்டமைப்பு துறையில் ரூ.100 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்ய ஏதுவாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு 70 விதமான துறை நிபுணர்களுடன் கலந்தாலோசித்து சுமார் ரூ.102 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை அடையாளம் கண்டுள்ளது.
வரும் 2024-25-ம் ஆண்டில் 5 டிரில்லியன் டாலர் என்ற பொருளாதார இலக்கை இந்தியா எட்டிவிடும். அனைத்து சவால்களும் கண்டறியப்பட்டுவிட்டது, பயணிப்பதற்கான அனைத்து வழிகளும் தயாராக உள்ளது.
2020-ம் ஆண்டின் இரண்டாவது பாதியில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும் என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X