என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இன்று ஓட்டு எண்ணிக்கை - ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?
Byமாலை மலர்22 Dec 2019 9:00 PM GMT (Updated: 22 Dec 2019 9:00 PM GMT)
ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று (திங்கட்கிழமை) எண்ணப்படுகின்றன. ஆட்சியை பிடிப்பது யார் என்பது மாலைக்குள் தெரிந்து விடும்.
ராஞ்சி:
ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்-மந்திரி ரகுபர்தாஸ் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு 81 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு நவம்பர் 30-ந்தேதி தொடங்கி டிசம்பர் 20-ந்தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடந்தது.
இதில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.
நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ள மாநிலமாக இருந்தாலும், பெரும்பாலும் ஓட்டுப்பதிவு அமைதியாகவே நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 65.17 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. காலை 9 மணியில் இருந்து முன்னணி நிலவரங்கள் தெரிய தொடங்கும். முதல் முடிவு மதியம் 1 மணிக்கும், கடைசி முடிவு இரவு 8 மணிக்கும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓட்டு எண்ணிக்கை பற்றி மாநில தலைமை தேர்தல் அதிகாரி வினய்குமார் சவுபே கூறியதாவது:-
மாவட்ட தலைநகரங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அதன்பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படும். ஒரு சுற்று எண்ணிக்கை உறுதி செய்யப்பட்ட பின்னர்தான் அடுத்த சுற்று எண்ணிக்கை தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படுகிறபோது, புள்ளிவிவரங்கள் தேர்தல் கமிஷன் உருவாக்கி உள்ள என்கோர் என்ற சாப்ட்வேரில் நேரடியாக பதிவு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. ஓட்டு எண்ணிக்கைக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
மின்னணு வாக்கு எந்திரங்கள் ஓட்டுப்பதிவு முடிந்த உடனேயே ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.
ஜார்கண்டில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது இன்று மாலைக்குள் தெரிய வந்து விடும்.
தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணிக்கு ஆதரவாக அமைந்துள்ளன. அவை பலிக்குமா என்பதுவும் இன்று தெரிந்து விடும்.
ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்-மந்திரி ரகுபர்தாஸ் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு 81 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு நவம்பர் 30-ந்தேதி தொடங்கி டிசம்பர் 20-ந்தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடந்தது.
இதில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.
நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ள மாநிலமாக இருந்தாலும், பெரும்பாலும் ஓட்டுப்பதிவு அமைதியாகவே நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 65.17 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. காலை 9 மணியில் இருந்து முன்னணி நிலவரங்கள் தெரிய தொடங்கும். முதல் முடிவு மதியம் 1 மணிக்கும், கடைசி முடிவு இரவு 8 மணிக்கும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓட்டு எண்ணிக்கை பற்றி மாநில தலைமை தேர்தல் அதிகாரி வினய்குமார் சவுபே கூறியதாவது:-
மாவட்ட தலைநகரங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அதன்பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படும். ஒரு சுற்று எண்ணிக்கை உறுதி செய்யப்பட்ட பின்னர்தான் அடுத்த சுற்று எண்ணிக்கை தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படுகிறபோது, புள்ளிவிவரங்கள் தேர்தல் கமிஷன் உருவாக்கி உள்ள என்கோர் என்ற சாப்ட்வேரில் நேரடியாக பதிவு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. ஓட்டு எண்ணிக்கைக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
மின்னணு வாக்கு எந்திரங்கள் ஓட்டுப்பதிவு முடிந்த உடனேயே ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.
ஜார்கண்டில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது இன்று மாலைக்குள் தெரிய வந்து விடும்.
தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணிக்கு ஆதரவாக அமைந்துள்ளன. அவை பலிக்குமா என்பதுவும் இன்று தெரிந்து விடும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X