என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியுரிமை சட்டம்: உ.பி. முழுவதும் வன்முறை - போலீசார், போராட்டக்காரர்கள் மோதல்
Byமாலை மலர்20 Dec 2019 11:44 AM GMT (Updated: 20 Dec 2019 11:44 AM GMT)
உத்தர பிரதேசத்தில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இன்று நடைபெற்ற போராட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது.
லக்னோ:
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவுக்குள் அகதிகளாக வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது.
இந்த திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. இந்த போராட்டங்கள் சில பகுதிகளில் வன்முறையாக உருவெடுத்து உள்ளது.
இந்நிலையில், உத்திர பிரதேசம் மாநிலம் கோரக்பூர் பகுதியில் இன்று ஜும்மா தொழுகையை முடித்துக்கொண்டு வெளியே வந்த மக்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
பின்னர் போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசியும் சாலையில் நின்றுகொண்டிருந்த கார்கள், பைக்குகள் என தங்கள் கண்ணில் பட்டவற்றையெல்லாம் தீவைத்து கொளுத்தியும் வன்முறையில் ஈடுபட்டனர்.
இதனால், போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்களை தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டு வீசியும் போலீசார் விரட்டியடித்தனர்.
உத்திர பிரதேசம் மாநிலத்தின் மீரட், பாக்ரேஜ், புலந்த்சாஹர், மிசாபர்நகர், கோரக்பூர் ஆகிய பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறிவருவதால் இன்று பிற்பகல் 3 மணியில் இருந்து கைபேசி இண்டர்நேட் சேவை மேற்கண்ட பகுதிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X