search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    குடியுரிமை சட்டம் குறித்து தவறான கருத்து பரவி வருகிறது - எடியூரப்பா

    குடியுரிமை சட்டம் குறித்து தவறான கருத்து பரவி வருகிறது என்று கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
    பெங்களூரு:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. டெல்லி உள்பட நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    கர்நாடக மாநிலத்திலும், இன்று பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.  இந்த நிலையில்,  குடியுரிமை சட்டம் குறித்து தவறான கருத்து பரவி வருகிறது என்று தெரிவித்துள்ள கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா,  மக்கள் அனைவரும் அமைதிகாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், சுய நல குழுக்களிடம் இருந்து மக்கள் விலகியிருக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
    Next Story
    ×