என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பாஜக பேரணி... தடுத்து நிறுத்திய போலீஸ்...
Byமாலை மலர்16 Dec 2019 1:18 PM GMT (Updated: 16 Dec 2019 1:18 PM GMT)
குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து கொல்கத்தாவில் பாஜக நடத்திய பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொல்கத்தா:
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வடமாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு இடங்களில் போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. மேற்கு வங்காள மாநிலத்திலும் இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்தது. தீ வைப்பு மற்றும் கடைகளை அடித்து நொறுக்கி சூறையாடுதல் போன்ற வன்முறை சம்பவங்களும் அரங்கேறின.
இந்த சட்டத்திற்கு எதிராக, முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் இன்று பேரணி நடைபெற்றது.
சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் ஒருபுறம் தீவிரமடைந்து வரும் நிலையில், சட்டத்தை ஆதரித்து மேற்கு வங்கத்தில் பாஜக சார்பில் கொல்கத்தாவில் பேரணி நடைபெற்றது. காரியா மோர் பகுதியில் இருந்து ஜாதவ்பூர் நோக்கி ஏராளமான பாஜகவினர் பேரணியாக சென்றனர்.
அப்போது சுலேகா கிராசிங் அருகே பேரிகார்டுகளை போட்டு போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால், பேரிகார்டுகளை தள்ளிவிட்டு பேரணியை தொடர பாஜகவினர் முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் தடுத்தபோது, இரு தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அந்த இடத்திலேயே பாஜகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மம்தா தலைமையில் பேரணி நடைபெற்றபோது, அதற்கு போட்டியாக பாஜக பேரணி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X