search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கேரளாவில் 8-ம் வகுப்பு மாணவி வீடு புகுந்து கற்பழிப்பு

    கேரள மாநிலம் கோட்டயம் காஞ்சிரப்பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம், காஞ்சிரப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மாணவி ஒருவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    மாணவி நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றார். வீட்டில் பெற்றோர் இல்லை. இதனால் மாணவி மட்டும் தனியாக இருந்தார்.

    அப்போது மாணவியின் சகோதரரின் நண்பர் என்று கூறிக்கொண்டு வாலிபர் ஒருவர் வீட்டிற்கு வந்தார். அவர், மாணவியிடம் குடிக்க தண்ணீர் கேட்டார்.

    மாணவி, தண்ணீர் எடுக்க சமையல் அறைக்கு சென்றார். அந்த நேரத்தில் வாலிபர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார்.

    திடீரென மாணவியை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்தார். இதனை எதிர்பார்க்காத மாணவி, அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    அக்கம் பக்கத்தினரை கண்டதும் வாலிபர், வீட்டில் இருந்து தப்பியோடினார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் மாணவியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த சம்பவம் பற்றி காஞ்சிரப்பள்ளி போலீசில் பெற்றோர் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கற்பழித்த வாலிபரை தேடினர். இதில் அவர், கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவரை கைது செய்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். பிடிபட்ட வாலிபர் பற்றி போலீசார் வேறு எதையும் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

    ஐதராபாத்தில் பெண் டாக்டரை கற்பழித்து எரித்துக் கொன்ற குற்றவாளிகள் 4 பேரை போலீசார் நேற்றுதான் என்கவுண்டர் செய்து சுட்டுக் கொன்றனர்.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கேரள மாநிலம் கோட்டயம் காஞ்சிரப்பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×