search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதுகாப்பு படையினர் (கோப்பு படம்)
    X
    பாதுகாப்பு படையினர் (கோப்பு படம்)

    காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி பலி

    காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் இன்று நடத்திய தேடுதல் வேட்டையின்போது ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம், பாரமுல்லா மாவட்டம் டஸ்வாரா கிரமத்தில் இன்று மாலை பாதுகாப்பு படையினரை குறிவைத்து ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். 

    இதனால், பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். ஆனால் மற்றுமொரு பயங்கரவாதி அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

    இதையடுத்து, அப்பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள பாதுகாப்பு படையினர் தப்பிச்சென்ற பயங்கரவாதிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    Next Story
    ×