search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்தரிக்கப்பட்ட படம்
    X
    சித்தரிக்கப்பட்ட படம்

    டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு - வெடிப்பொருட்களுடன் 3 பேர் கைது

    நாட்டின் தலைநகரான டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள போலீசார் அதிநவீன வெடிப்பொருட்களுடன் 3 பேரை கைது செய்துள்ளனர்.
    புதுடெல்லி:

    பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தூண்டுதலின்பேரில் நாட்டின் பல பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த சிலர் தகுந்த நேரத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாக மத்திய உளவுத்துறை வட்டாரங்கள் அவ்வப்போது எச்சரித்து வருகின்றன.

    இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பிரமோத் குஷ்வாஹா

    இந்நிலையில், நாட்டின் தலைநகரான டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள டெல்லி சிறப்பு படை போலீஸ் கமிஷனர் பிரமோத் குஷ்வாஹா அதிநவீன வெடிப்பொருட்களுடன் முக்காதிர் இஸ்லாம், ரஞ்சீத் அலி, ஜமீல் லுயிட் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருவதாகவும் இன்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×