search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    திருமணமான 9 மாதத்தில் புதுப்பெண் கழுத்தை நெரித்துக்கொலை - கணவர் போலீசில் சரண்

    கேரள மாநிலம் ஆழப்புழா அருகே திருமணமான 9 மாதத்தில் புதுப்பெண் கழுத்தை நெரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கணவர் போலீசில் சரணடைந்துள்ளார்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் குண்டறா அடுத்துள்ள முல வண்ணம் பகுதியை சேர்ந்தவர் வைசாக் பைஜூ (வயது 28). இவரது மனைவி கிருதிமோகன் (25). கிருதிமோகனுக்கு ஏற்கனவே திருமணமாகி 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் முதல் கணவரை பிரிந்து 2-வதாக வைசாக் பைஜூவை கடந்த 9 மாதத்துக்கு முன்பு கிருதிமோகன் திருமணம் செய்து கொண்டார். திருமணமான ஆரம்ப காலத்திலேயே கிருதிமோகனின் சொத்து குறித்து கணவர் வைசாக் பைஜூ கேட்க தொடங்கினார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு தொடங்கியது.

    இந்நிலையில் கணவரை அழைத்துக்கொண்டு கிருதிமோகன் தனது தாய் பிந்து வீட்டுக்கு சென்றார். அன்று இரவும் சொத்து குறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று வெகு நேரமாகியும் புதுமணத்தம்பதி வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த தாய் பிந்து அறை கதவை திறந்து பார்த்தபோது கிருதிமோகன் மயங்கி கிடந்தார்.

    அதிர்ச்சியடைந்த அவர் மகளை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் கழுத்தை நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கூறினார். இதனையடுத்து தாய் பிந்து கதறி அழுதுகொண்டு வீட்டுக்கு வந்தார். வீட்டில் தூங்குவதுபோல் சிறிது நேரம் வைசாக் பைஜூ நடித்தார்.

    பின்னர் தப்பிக்க முடியாது என்று நினைத்த அவர் காரை எடுத்துக்கொண்டு குண்டறா போலீசில் மனைவியை கொன்று விட்டதாக கூறி சரணடைந்தார்.
    Next Story
    ×