என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர்: சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல்- பாதுகாப்பு படை வீரர்கள் 6 பேர் காயம்
Byமாலை மலர்26 Oct 2019 3:06 PM GMT (Updated: 26 Oct 2019 3:06 PM GMT)
காஷ்மீரில் உள்ள சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் இன்று மாலை நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து அங்கு ராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்ரீநகர் பகுதியின் கரண் நகர் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் பாதுகாப்பு படை வீரர்கள் இன்று மாலை வழக்கம்போல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் அந்த சோதனைச்சாவடி மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
துரிதமாக செயல்பட்ட பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் மீது எதிர் தாக்குதல் நடத்தினர். ஆனால், பயங்கரவாதிகள் அந்த இடத்தை விட்டு உடனடியாக தப்பிச்சென்றுவிட்டனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு பணியில் இருந்த 6 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த வீரர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X