என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிலவுக்கு செயற்கைகோள் அனுப்புவதன் மூலம் நாட்டின் ஏழைகளுக்கு உணவு அளிக்க முடியாது: ராகுல் காந்தி
Byமாலை மலர்13 Oct 2019 3:33 PM GMT (Updated: 13 Oct 2019 3:33 PM GMT)
நிலவுக்கு செயற்கைக்கோள் அனுப்புவதன் மூலம் உங்களால் நாட்டின் ஏழை மக்களுக்கு உணவு அளிக்க முடியாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மும்பை:
288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கும், 90 உறுப்பினர்களை கொண்ட அரியானா சட்டசபைக்கும் வருகிற 21-ந்தேதி தேர்தல் நடக்கிறது. 24-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடை பெறுகிறது.
மராட்டிய மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இன்று ஒரே நாளில் போட்டி பிரசாரம் செய்தார்கள்.
காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி மராட்டியம் லத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-
நிலவுக்கு செயற்கைக்கோள் அனுப்புவதால் நாட்டில் உள்ள ஏழைகளுக்கு உங்களால் உணவு அளிக்க முடியாது. இத்தகைய திட்டங்கள் இளைஞர்களின் பசியை முடிவுக்கு கொண்டு வராது. இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மை பற்றி பேசும்போது, நிலவை பாருங்கள் என்று மத்திய அரசு கூறுகிறது.
மக்களின் கவனத்தை கார்பெட் பார்க், சீனா, பாகிஸ்தான், ஜப்பான், கொரியா என திசை திருப்பும் வேலைகளில்தான் மோடியும், அமித் ஷாவும் கவனம் செலுத்துகிறார்கள். நாட்டின் முக்கிய பிரச்சனைகளில் அமைதி காத்து வருகிறார்கள்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் காங்கிரஸ் அரசால் நிறுவப்பட்டது. இஸ்ரோவில் இருந்து ராக்கெட்டுகளை அனுப்ப பல ஆண்டுகள் தேவைப்பட்டன. இஸ்ரோவின் நன்மைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார் பிரதமர் மோடி.
இவ்வாறு அவர் பேசினார்.
288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கும், 90 உறுப்பினர்களை கொண்ட அரியானா சட்டசபைக்கும் வருகிற 21-ந்தேதி தேர்தல் நடக்கிறது. 24-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடை பெறுகிறது.
மராட்டிய மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இன்று ஒரே நாளில் போட்டி பிரசாரம் செய்தார்கள்.
காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி மராட்டியம் லத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-
நிலவுக்கு செயற்கைக்கோள் அனுப்புவதால் நாட்டில் உள்ள ஏழைகளுக்கு உங்களால் உணவு அளிக்க முடியாது. இத்தகைய திட்டங்கள் இளைஞர்களின் பசியை முடிவுக்கு கொண்டு வராது. இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மை பற்றி பேசும்போது, நிலவை பாருங்கள் என்று மத்திய அரசு கூறுகிறது.
மக்களின் கவனத்தை கார்பெட் பார்க், சீனா, பாகிஸ்தான், ஜப்பான், கொரியா என திசை திருப்பும் வேலைகளில்தான் மோடியும், அமித் ஷாவும் கவனம் செலுத்துகிறார்கள். நாட்டின் முக்கிய பிரச்சனைகளில் அமைதி காத்து வருகிறார்கள்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் காங்கிரஸ் அரசால் நிறுவப்பட்டது. இஸ்ரோவில் இருந்து ராக்கெட்டுகளை அனுப்ப பல ஆண்டுகள் தேவைப்பட்டன. இஸ்ரோவின் நன்மைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார் பிரதமர் மோடி.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X