என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒருதலை காதலால் விபரீதம் - மாணவியை கொன்று வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்10 Oct 2019 8:19 AM GMT (Updated: 10 Oct 2019 8:19 AM GMT)
கேரளாவில் தனது காதலை ஏற்க மறுத்த பிளஸ் 2 மாணவியை எரித்து கொன்று, வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:
கொச்சி காக்கநாடு பகுதியைச் சேர்ந்தவர் ஷாலன். இவரது மகள் தேவிகா(வயது17). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் தேவிகா பிளஸ்-2 படித்து வந்தார். எர்ணாகுளம் வடக்கு பரவூரைச் சேர்ந்த பெயிண்டிங் தொழிலாளி மிதுன் என்பவர் மாணவி தேவிகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
பலமுறை அவர் தனது காதலை மாணவியிடம் கூறிய போதும், அவர் அதை ஏற்க மறுத்து விட்டார். இதனால் மாணவி மீது மிதுன் ஆத்திரத்தில் இருந்தார்.
இன்று அதிகாலை ஒரு மணி அளவில் மிதுன் கையில் பெட்ரோல் கேனுடன் தேவி வீட்டிற்குள் சென்றார். அவர் கதவை பலமாக தட்டியதால் ஷாலன் கதவை திறந்துள்ளார். அவரை தள்ளி விட்டு வீட்டுக்குள் மிதுன் புகுந்தார். இந்த சத்தம் கேட்டு எழுந்து வந்த தேவிகா மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதனால் அலறி துடித்த தேவிகா கீழே சரிந்தார்.
உடனே மிதுன் தன் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இந்த சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் மிதுனையும், தேவிகாவையும் காப்பாற்ற முயன்றனர்.
ஆனால் சம்பவ இடத்திலேயே தேவிகா உடல் கருகி பலியானார். ஆஸ்பத்திரியில் மிதுன் உயிர் இழந்தார்.
கொச்சி காக்கநாடு பகுதியைச் சேர்ந்தவர் ஷாலன். இவரது மகள் தேவிகா(வயது17). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் தேவிகா பிளஸ்-2 படித்து வந்தார். எர்ணாகுளம் வடக்கு பரவூரைச் சேர்ந்த பெயிண்டிங் தொழிலாளி மிதுன் என்பவர் மாணவி தேவிகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
பலமுறை அவர் தனது காதலை மாணவியிடம் கூறிய போதும், அவர் அதை ஏற்க மறுத்து விட்டார். இதனால் மாணவி மீது மிதுன் ஆத்திரத்தில் இருந்தார்.
இன்று அதிகாலை ஒரு மணி அளவில் மிதுன் கையில் பெட்ரோல் கேனுடன் தேவி வீட்டிற்குள் சென்றார். அவர் கதவை பலமாக தட்டியதால் ஷாலன் கதவை திறந்துள்ளார். அவரை தள்ளி விட்டு வீட்டுக்குள் மிதுன் புகுந்தார். இந்த சத்தம் கேட்டு எழுந்து வந்த தேவிகா மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதனால் அலறி துடித்த தேவிகா கீழே சரிந்தார்.
உடனே மிதுன் தன் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இந்த சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் மிதுனையும், தேவிகாவையும் காப்பாற்ற முயன்றனர்.
ஆனால் சம்பவ இடத்திலேயே தேவிகா உடல் கருகி பலியானார். ஆஸ்பத்திரியில் மிதுன் உயிர் இழந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X