search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    ஐஎன்எக்ஸ் முறைகேட்டில் 4 முன்னாள் அதிகாரிகளிடமும் விசாரணை - பிரதமருக்கு ஓய்வுபெற்ற அதிகாரிகள் கடிதம்

    ஐஎன்எக்ஸ் முறைகேட்டில் தொடர்புடைய 4 முன்னாள் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த வேண்டும் என பிரதமருக்கு ஓய்வுபெற்ற அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
    புதுடெல்லி:

    ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள திகார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே, சிறையில் இருந்தவாறு தனது குடும்பத்தார் மூலம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், (ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில்) நீங்கள் மட்டும் கைது செய்யப்பட்டிருப்பது ஏன்? என்று மக்கள் என்னை கேட்கின்றனர். இதற்கு என்னிடம் பதில் இல்லை. எந்த அதிகாரியும் எந்த தவறையும் செய்யவில்லை. யாரும் கைது செய்யப்பட வேண்டும் என நான் விரும்பவில்லை என அதில் குறிப்பிட்டிருந்தார்.

    ப.சித்ம்பரம்

    இந்நிலையில், ஐஎன்எக்ஸ் முறைகேட்டில் தொடர்புடைய 4 முன்னாள் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓய்வுபெற்ற 71 அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
    Next Story
    ×