என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
எர்ணாகுளம் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் பிணமாக கிடந்த கள்ளக்காதல் ஜோடி
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள ஆலுவா தோட்டக்காட்டுக்கர என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
இங்குள்ள மேல்தளத்தில் ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுபற்றி அங்கு வசிப்பவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது அந்த வீட்டில் வாலிபர் ஒருவரும், இளம்பெண் ஒருவரும் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தனர். அவர்கள் இறந்து 4 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கும் என்பதால் அவர்களது உடல் அழுகிய நிலையில் கிடந்தது.
பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்த வாலிபரும், இளம்பெண்ணும் அதே குடியிருப்பில் வசிப்பவர்கள் என்பது தெரியவந்தது.
இறந்து கிடந்த வாலிபரின் பெயர் ரமேஷ் (வயது 33). இவர் செல்போன் நிறுவனத்தில் டெக்னீசியனாக வேலை செய்து வந்தார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. இளம்பெண்ணின் பெயர் மோனிஷா (25). அவருக்கு திருமணமாகி சதீஷ் என்ற கணவரும், குழந்தைகளும் உள்ளனர்.
ரமேஷ் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்திலும், மோனிஷா கணவருடன் கீழ் தளத்திலும் வசித்து வந்தனர். சதீஷ் சினிமா எடிட்டிங் தொடர்பான ஸ்டூடியோவில் பணியாற்றி வந்தார்.
ரமேசுக்கும், மோனிஷாவுக்கும் கள்ளத் தொடர்பு இருந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். எதிர்ப்பு காரணமாக அவர்கள் தற்கொலை செய்தார்களா? அல்லது அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்