என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு
Byமாலை மலர்20 Sep 2019 8:10 AM GMT (Updated: 20 Sep 2019 8:10 AM GMT)
கேரள அரசு ஓணம் பம்பர் லாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடியான முதல் பரிசு கிடைத்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் அரசு சார்பில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலங்களில் பம்பர் குலுக்கல்களும் நடத்தப்படுகிறது.
ஓணம் பண்டிகையையொட்டி முதல் பரிசு ரூ.12 கோடி என்ற சிறப்பு லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டது. இந்த டிக்கெட்டின் விலை ரூ.300 ஆகும். நேற்று இந்த லாட்டரி சீட்டு குலுக்கல் நடத்தப்பட்டு பரிசு பெற்றவர்கள் விவரமும் அறிவிக்கப்பட்டது.
ரூ.12 கோடி பரிசு என்பதால் அந்த அதிர்ஷ்டசாலி யார்? என்பதை அறியும் ஆவல் அனைவரிடமும் ஏற்பட்டது. தற்போது முதல் பரிசு பெற்றவர்கள் 6 நண்பர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
திருச்சூர் மாவட்டம் கருநாகப்பள்ளியில் உள்ள ஒரு நகை கடையில் ஊழியராக பணிபுரியும் ரோனி, சுபின் தோமஸ், ரெதீஷ், ராஜீவன், ரெதீஷ் குமார், ஜார்ஜ் ஆகிய 6 பேரும் நண்பர்கள் ஆவார்கள்.
இவர்கள் 6 பேரும் ஓணம் பண்டிகைக்காக ஊருக்கு புறப்பட்டு சென்றபோது அந்த பகுதியில் உள்ள சிவன் குட்டி என்ற லாட்டரி விற்பனையாளரிடம் ரூ.300 கொடுத்து அனைவரும் சேர்ந்து லாட்டரி சீட்டை வாங்கி உள்ளனர். அந்த லாட்டரி சீட்டுக்கு தான் முதல் பரிசு கிடைத்துள்ளது.
பரிசு தொகை ரூ.12 கோடி என்றாலும் வருமான வரி, ஏஜெண்டு ஊக்கத்தொகை போக பரிசு பணமாக ரூ.7 கோடியே 56 லட்சம் கிடைக்கும்.
பரிசு கிடைத்த மகிழ்ச்சியில் உள்ள அந்த 6 நண்பர்களும் தங்களுக்கு கிடைத்த பரிசு பணத்தில் ஒரு சதவீதத்தை கேரள புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு வழங்கப்போவதாக கூறி உள்ளனர்.
கேரளாவில் அரசு சார்பில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலங்களில் பம்பர் குலுக்கல்களும் நடத்தப்படுகிறது.
ஓணம் பண்டிகையையொட்டி முதல் பரிசு ரூ.12 கோடி என்ற சிறப்பு லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டது. இந்த டிக்கெட்டின் விலை ரூ.300 ஆகும். நேற்று இந்த லாட்டரி சீட்டு குலுக்கல் நடத்தப்பட்டு பரிசு பெற்றவர்கள் விவரமும் அறிவிக்கப்பட்டது.
ரூ.12 கோடி பரிசு என்பதால் அந்த அதிர்ஷ்டசாலி யார்? என்பதை அறியும் ஆவல் அனைவரிடமும் ஏற்பட்டது. தற்போது முதல் பரிசு பெற்றவர்கள் 6 நண்பர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
திருச்சூர் மாவட்டம் கருநாகப்பள்ளியில் உள்ள ஒரு நகை கடையில் ஊழியராக பணிபுரியும் ரோனி, சுபின் தோமஸ், ரெதீஷ், ராஜீவன், ரெதீஷ் குமார், ஜார்ஜ் ஆகிய 6 பேரும் நண்பர்கள் ஆவார்கள்.
இவர்கள் 6 பேரும் ஓணம் பண்டிகைக்காக ஊருக்கு புறப்பட்டு சென்றபோது அந்த பகுதியில் உள்ள சிவன் குட்டி என்ற லாட்டரி விற்பனையாளரிடம் ரூ.300 கொடுத்து அனைவரும் சேர்ந்து லாட்டரி சீட்டை வாங்கி உள்ளனர். அந்த லாட்டரி சீட்டுக்கு தான் முதல் பரிசு கிடைத்துள்ளது.
பரிசு தொகை ரூ.12 கோடி என்றாலும் வருமான வரி, ஏஜெண்டு ஊக்கத்தொகை போக பரிசு பணமாக ரூ.7 கோடியே 56 லட்சம் கிடைக்கும்.
பரிசு கிடைத்த மகிழ்ச்சியில் உள்ள அந்த 6 நண்பர்களும் தங்களுக்கு கிடைத்த பரிசு பணத்தில் ஒரு சதவீதத்தை கேரள புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு வழங்கப்போவதாக கூறி உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X