என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உள்துறை மந்திரி அமித் ஷாவுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு
Byமாலை மலர்19 Sep 2019 8:33 AM GMT (Updated: 19 Sep 2019 8:33 AM GMT)
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்து பேசினார்.
புதுடெல்லி:
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, டெல்லியில் இன்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது மேற்கு வங்க மாநிலத்தை பங்களா என பெயர் மாற்றம் செய்வது தொடர்பான கோரிக்கையை முன்வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று பிரதமர் மோடியை சந்தித்தபோதும், இதே கோரிக்கையை மம்தா முன்வைத்தார்.
அரசியலில் பாஜகவும், திரிணாமுல் காங்கிரசும் எதிரெதிர் துருவங்களாக உள்ளன. இரண்டு கட்சி தலைவர்களும் ஒருவரையொருவர் விமர்சனம் செய்து வந்த நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
சட்டவிரோத குடியேறிகள் அனைவரையும் வெளியேற்றுவதற்கு, அசாமில் உள்ளது போன்று நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க வேண்டியது அவசியம் என்று அமித் ஷா கூறியிருந்தார். அதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என பாஜக மற்றும் மோடி அரசுக்கு மம்தா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, டெல்லியில் இன்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது மேற்கு வங்க மாநிலத்தை பங்களா என பெயர் மாற்றம் செய்வது தொடர்பான கோரிக்கையை முன்வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று பிரதமர் மோடியை சந்தித்தபோதும், இதே கோரிக்கையை மம்தா முன்வைத்தார்.
அரசியலில் பாஜகவும், திரிணாமுல் காங்கிரசும் எதிரெதிர் துருவங்களாக உள்ளன. இரண்டு கட்சி தலைவர்களும் ஒருவரையொருவர் விமர்சனம் செய்து வந்த நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
சட்டவிரோத குடியேறிகள் அனைவரையும் வெளியேற்றுவதற்கு, அசாமில் உள்ளது போன்று நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க வேண்டியது அவசியம் என்று அமித் ஷா கூறியிருந்தார். அதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என பாஜக மற்றும் மோடி அரசுக்கு மம்தா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X