என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசிரியர் தினத்தன்று செல்போனுக்காக பேராசிரியரை கொன்ற மாணவர்
Byமாலை மலர்16 Sep 2019 3:59 AM GMT (Updated: 16 Sep 2019 3:59 AM GMT)
ஒடிசா மாநிலம் பர்மன்பூரில் கல்லூரி பேராசிரியரின் விலை உயர்ந்த செல்போனை திருடுவதற்காக அவரை அடித்துக்கொலை செய்த மாணவரை போலீசார் கைது செய்தனர்.
சம்பல்பூர்:
ஒடிசா மாநிலம் பர்மன்பூரில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தவர் அருதானந்த பிரதான் (வயது 47). எல்.ஐ.சி. ஏஜெண்டாகவும் இருந்தார். அங்குள்ள குடியிருப்பில் வசித்து வந்தார். ஆசிரியர் தினமான கடந்த 5-ந்தேதி தனது வீட்டில் அருதானந்த பிரதான் மர்மமாக இறந்து கிடந்தார்.
அப்போது அவரது செல்போன் மாயமாகி இருந்தது. நவீன தொழில்நுட்பம் மூலமாக சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்தபோது, மாயமான விலை உயர்ந்த செல்போனை புதிய சிம்கார்டு மூலம் அதே கல்லூரி மாணவர் ராஜூ (20) என்பவர் பயன்படுத்துவது தெரியவந்தது.
விசாரணையில், ராஜூ பேராசிரியர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். பேராசிரியர் வைத்திருந்த செல்போனை திருடுவதற்காக அவரை அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து மாணவரை போலீசார் கைது செய்தனர்.
ஒடிசா மாநிலம் பர்மன்பூரில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தவர் அருதானந்த பிரதான் (வயது 47). எல்.ஐ.சி. ஏஜெண்டாகவும் இருந்தார். அங்குள்ள குடியிருப்பில் வசித்து வந்தார். ஆசிரியர் தினமான கடந்த 5-ந்தேதி தனது வீட்டில் அருதானந்த பிரதான் மர்மமாக இறந்து கிடந்தார்.
அப்போது அவரது செல்போன் மாயமாகி இருந்தது. நவீன தொழில்நுட்பம் மூலமாக சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்தபோது, மாயமான விலை உயர்ந்த செல்போனை புதிய சிம்கார்டு மூலம் அதே கல்லூரி மாணவர் ராஜூ (20) என்பவர் பயன்படுத்துவது தெரியவந்தது.
விசாரணையில், ராஜூ பேராசிரியர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். பேராசிரியர் வைத்திருந்த செல்போனை திருடுவதற்காக அவரை அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து மாணவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X