search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப.சிதம்பரம்
    X
    ப.சிதம்பரம்

    கைவிட்டது உச்ச நீதிமன்றம்- அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் கிடையாது

    ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பக அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
    புதுடெல்லி:

    ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் முன்ஜாமீன் கோரி முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் டெல்லி உயர்நீதிமன்றம் அவரது மனுவை நிராகரித்தது.

    இதையடுத்து ப.சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

    அப்போது, ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு புகார் தொடர்பான வழக்குகள் சரியான பாதையில் செல்படுவதாக கூறிய நீதிபதிகள், ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டனர். முன்ஜாமீன் என்பது ஒருவரின் அடிப்படை உரிமை அல்ல என்று கூறி அவரது மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். விசாரணை நீதிமன்றத்தை அணுகி, ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறினர்.

    உச்ச நீதிமன்றம்

    மேலும் விசாரணை அமைப்புகளுக்கு ப.சிதம்பரம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ப.சிதம்பரத்துக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

    சிபிஐ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரத்தின் விசாரணைக் காவல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்ததாக அவரை அமலாக்கத்துறையும் கைது செய்ய தயாராகி வருகிறது. 
    Next Story
    ×