என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பா.ஜனதாவும், பஜ்ரங் தளமும் ‘பாகிஸ்தான் உளவு அமைப்பிடம் இருந்து பணம் பெறுகின்றன’ - திக்விஜய் சிங்
Byமாலை மலர்1 Sep 2019 10:13 PM GMT (Updated: 1 Sep 2019 10:13 PM GMT)
பா.ஜனதாவும், பஜ்ரங் தளமும் ‘பாகிஸ்தான் உளவு அமைப்பிடம் இருந்து பணம் பெறுவதாக மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய் சிங் தெரிவித்தார்.
பிந்த்:
மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய் சிங், நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசும்போது பா.ஜனதா மற்றும் பஜ்ரங்தள அமைப்பு மீது குற்றம் சாட்டினார்.
அவர் கூறுகையில், ‘பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்காக இந்தியாவில் முஸ்லிம்களை விட முஸ்லிம் அல்லாதவர்கள்தான் அதிகம் உளவு பார்க்கிறார்கள். இதை நினைவில் கொள்ளுங்கள். பஜ்ரங்தளம் மற்றும் பா.ஜனதா கட்சி ஆகியவை ஐ.எஸ்.ஐ.யிடம் இருந்து பணம் பெறுகின்றன. இதில் கவனம் செலுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
திக்விஜய் சிங்கின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பா.ஜனதா தலைவர்களில் ஒருவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான சிவராஜ்சிங் சவுகான் பதிலடி கொடுத்துள்ளார். ‘பா.ஜனதா மற்றும் சங்பரிவார் அமைப்புகளின் தேசப்பற்றுக்கு ஒருவரும் சான்றிதழ் வழங்க தேவையில்லை’ என கூறிய அவர், இத்தகைய கருத்துகள் மூலம் திக்விஜய் சிங் நம்பகத்தன்மையை இழந்து விட்டார் எனவும் குறைகூறினார்.
இந்த நிலையில், ‘பஜ்ரங்தளம் மற்றும் பா.ஜனதா ஐ.டி. பிரிவை சேர்ந்த சிலர் ஐ.எஸ்.ஐ.யிடம் இருந்து பணம் வாங்கியதற்காக கைது செய்யப்பட்டனர்’ என்றுதான் கூறியதாகவும், பா.ஜனதா பணம் வாங்குவதாக கூறவில்லை என்றும் நேற்று டுவிட்டர் தளத்தில் திக்விஜய் சிங் குறிப்பிட்டு இருந்தார்.
மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய் சிங், நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசும்போது பா.ஜனதா மற்றும் பஜ்ரங்தள அமைப்பு மீது குற்றம் சாட்டினார்.
அவர் கூறுகையில், ‘பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்காக இந்தியாவில் முஸ்லிம்களை விட முஸ்லிம் அல்லாதவர்கள்தான் அதிகம் உளவு பார்க்கிறார்கள். இதை நினைவில் கொள்ளுங்கள். பஜ்ரங்தளம் மற்றும் பா.ஜனதா கட்சி ஆகியவை ஐ.எஸ்.ஐ.யிடம் இருந்து பணம் பெறுகின்றன. இதில் கவனம் செலுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
திக்விஜய் சிங்கின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பா.ஜனதா தலைவர்களில் ஒருவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான சிவராஜ்சிங் சவுகான் பதிலடி கொடுத்துள்ளார். ‘பா.ஜனதா மற்றும் சங்பரிவார் அமைப்புகளின் தேசப்பற்றுக்கு ஒருவரும் சான்றிதழ் வழங்க தேவையில்லை’ என கூறிய அவர், இத்தகைய கருத்துகள் மூலம் திக்விஜய் சிங் நம்பகத்தன்மையை இழந்து விட்டார் எனவும் குறைகூறினார்.
இந்த நிலையில், ‘பஜ்ரங்தளம் மற்றும் பா.ஜனதா ஐ.டி. பிரிவை சேர்ந்த சிலர் ஐ.எஸ்.ஐ.யிடம் இருந்து பணம் வாங்கியதற்காக கைது செய்யப்பட்டனர்’ என்றுதான் கூறியதாகவும், பா.ஜனதா பணம் வாங்குவதாக கூறவில்லை என்றும் நேற்று டுவிட்டர் தளத்தில் திக்விஜய் சிங் குறிப்பிட்டு இருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X