என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
‘ஏர் இந்தியா’ நிறுவனத்தில் முறைகேடு: ப சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்
Byமாலை மலர்20 Aug 2019 2:04 AM GMT (Updated: 20 Aug 2019 2:06 AM GMT)
‘ஏர் இந்தியா’ நிறுவனத்தில் முறைகேடு வழக்கு தொடர்பாக, வருகிற 23-ந்தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
புதுடெல்லி :
காங்கிரஸ் ஆட்சியின்போது விமானத்துறை மந்திரியாக பிரபு பட்டேல் பதவி வகித்தபோது, ‘ஏர் இந்தியா’ நிறுவனத்துக்கு ‘ஏர்பஸ்கள்’ வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன.
மேலும் சர்வதேச விமான நிறுவனங்களுக்கான விமான இடங்கள் ஒதுக்குவதில் முறைகேடு நடைபெற்றதாகவும், ஏர் இந்தியாவுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் புகார்கள் கொடுக்கப்பட்டன. அதன்பேரில் அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.
இது தொடர்பாக முன்னாள் விமானத்துறை மந்திரி பிரபுல் பட்டேலிடம் அமலாக்கத்துறை ஏற்கனவே விசாரணை நடத்தியது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக, முறைகேடு நடந்தபோது நிதி மந்திரியாக பதவி வகித்த ப.சிதம்பரத்திடம் விசாரிக்க அமாலக்கத்துறை முடிவு செய்துள்ளது. இதனால் வருகிற 23-ந்தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
காங்கிரஸ் ஆட்சியின்போது விமானத்துறை மந்திரியாக பிரபு பட்டேல் பதவி வகித்தபோது, ‘ஏர் இந்தியா’ நிறுவனத்துக்கு ‘ஏர்பஸ்கள்’ வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன.
மேலும் சர்வதேச விமான நிறுவனங்களுக்கான விமான இடங்கள் ஒதுக்குவதில் முறைகேடு நடைபெற்றதாகவும், ஏர் இந்தியாவுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் புகார்கள் கொடுக்கப்பட்டன. அதன்பேரில் அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.
இது தொடர்பாக முன்னாள் விமானத்துறை மந்திரி பிரபுல் பட்டேலிடம் அமலாக்கத்துறை ஏற்கனவே விசாரணை நடத்தியது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக, முறைகேடு நடந்தபோது நிதி மந்திரியாக பதவி வகித்த ப.சிதம்பரத்திடம் விசாரிக்க அமாலக்கத்துறை முடிவு செய்துள்ளது. இதனால் வருகிற 23-ந்தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X