என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெறுப்புணர்வை பரப்பி மக்களை பிரிக்கிறது பாஜக- அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு
Byமாலை மலர்17 Aug 2019 2:39 AM GMT (Updated: 17 Aug 2019 2:39 AM GMT)
பா.ஜனதா, வெறுப்புணர்வை பரப்பி, மக்களை பிளவுபடுத்துகிறது என்று சமாஜ்வாடி கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
எடாவா :
உத்தரபிரதேச மாநிலம் எடாவாவில் நடைபெற்ற ‘ரக்ஷா பந்தன்’ நிகழ்ச்சியில், சமாஜ்வாடி கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
தேர்தலின்போது, பா.ஜனதா தலைவர்கள், பொறாமை, வெறுப்புணர்வை பரப்பி ஆட்சியை பிடித்தனர். நல்ல உடை அணிந்து, பொய் சொல்பவர்களை மக்களும் நம்பி விட்டனர்.
இப்போதும் பா.ஜனதா, வெறுப்புணர்வை பரப்பி, மக்களை பிளவுபடுத்துகிறது. ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய ‘பிரித்தாளும் கொள்கை’யை அவர்களும் பின்பற்றுகிறார்கள். முன்பெல்லாம் வேலை எளிதாக கிடைத்தது. ஆனால், இடஒதுக்கீடு காரணமாக, இளைஞர்கள் கடுமையாக போராட வேண்டியுள்ளது.
சமாஜ்வாடி தொண்டர்கள் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும். கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அகிலேஷ் யாதவ் பேசினார்.
உத்தரபிரதேச மாநிலம் எடாவாவில் நடைபெற்ற ‘ரக்ஷா பந்தன்’ நிகழ்ச்சியில், சமாஜ்வாடி கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
தேர்தலின்போது, பா.ஜனதா தலைவர்கள், பொறாமை, வெறுப்புணர்வை பரப்பி ஆட்சியை பிடித்தனர். நல்ல உடை அணிந்து, பொய் சொல்பவர்களை மக்களும் நம்பி விட்டனர்.
இப்போதும் பா.ஜனதா, வெறுப்புணர்வை பரப்பி, மக்களை பிளவுபடுத்துகிறது. ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய ‘பிரித்தாளும் கொள்கை’யை அவர்களும் பின்பற்றுகிறார்கள். முன்பெல்லாம் வேலை எளிதாக கிடைத்தது. ஆனால், இடஒதுக்கீடு காரணமாக, இளைஞர்கள் கடுமையாக போராட வேண்டியுள்ளது.
சமாஜ்வாடி தொண்டர்கள் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும். கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அகிலேஷ் யாதவ் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X