search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி ஐகோர்ட்
    X
    டெல்லி ஐகோர்ட்

    இரட்டை இலைக்கு லஞ்சம் வழக்கு- டெல்லி போலீஸ் பதலளிக்க உத்தரவு

    இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக டெல்லி போலீஸ் பதிலளிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இதை எதிர்த்து டி.டி.வி.தினகரன் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

    இதையடுத்து பாட்டியாலா நீதிமன்ற விசாரணைக்கு டெல்லி ஐகோர்ட்டு தடை விதித்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, டெல்லி போலீசார் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் பாட்டியாலா நீதிமன்றம் விசாரணை செய்வதற்கான தடையை செப். 30-ந்தேதி வரை நீட்டித்தும் உத்தரவிட்டது.
    Next Story
    ×