என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
2 பெண் குழந்தைகள் பெற்ற மனைவிக்கு முத்தலாக்- கணவர் மீது வழக்கு
பாட்னா:
முத்தலாக் தடை சட்டம் கடந்த 1-ந்தேதி அமுலுக்கு வந்தது. இந்த சட்டத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் இருக்கிறது.
அதே நேரத்தில் வட மாநிலங்களில் முத்தலாக் முறையால் இஸ்லாமிய பெண்கள் உண்மையிலேயே பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கு பரிதாபத்துக்குரிய பர்சானா ஒரு சாட்சி.
23 வயதாகும் பர்சானா பீகார் மாநிலம் சுபால் மாவட்டம் மகேஷ்புர் கிராமத்தை சேர்ந்தவர். இவரது கணவர் இக்ராமுல் (28).
இந்த தம்பதிக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. பிறந்த சில நாட்களிலேயே அந்த குழந்தை இறந்து விட்டது.
அம்மா, பெண்ணாக பிறந்த என்னால் நீ தான் துயரப்படப்போகிறாய். வேண்டாம் உனக்கு அந்த கஷ்டம் என்று நினைத்ததோ என்னவோ குழந்தை இறந்து விட்டது.
இக்ராமுல் பெண் குழந்தையை விரும்பவில்லை. இந்த நிலையில் மீண்டும் பர்சானா கர்ப்பம் அடைந்தார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு அழகான இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார். பெண் குழந்தைகள் பிறந்ததால் கணவர் என்ன செய்யப் போகிறாரோ என்ற பயத்திலேயே பர்சானா இருந்து இருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு போன் மணி ஒலித்ததும் எடுத்து பேசி இருக்கிறார். எதிர்முனையில் கணவர் இக்ராமுல். ‘பெண் குழந்தைகளை பெற்ற நீயும் வேண்டாம். குழந்தைகளும் வேண்டாம். உன்னை தலாக் செய்யப்போகிறேன் என்று கத்தி இருக்கிறார்.
அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பர்சானா கணவரிடம் அழுது கெஞ்சி இருக்கிறார். ஆனாலும் அவர் மனம் இறங்கவில்லை.
போனிலேயே ‘தலாக்... தலாக்... தலாக்...! என்று மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்து விட்டதாக அறிவித்து இருக்கிறார்.
அதோடு நிற்கவில்லை உடனடியாக வீட்டில் இருந்த அவரது நாத்தனார்கள் தலாக் செய்து விட்டதால் இனி உங்கள் அறையில் இருக்க கூடாது என்று வெளியேற்றி இருக்கிறார்கள்.
பொழுது விடிந்ததும் பிறந்து 10 நாட்களே ஆன இரட்டை குழந்தைகளுடன் பர்சானா அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். அவரது நிலமையை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.
இதையடுத்து பர்சானா சாதர் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்துள்ளார். போலீசார் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் இக்ராமுல் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முத்தலாக் தடை சட்டம் அமுலுக்கு வந்த பிறகு பீகார் மாநிலத்தில் பதிவான முதல் வழக்க இது.
இதேபோல் உத்தரபிர தேசம் மாநிலம் பதேபூர் மாவட்டம் ஜிக்னி கிராமத்தை சேர்ந்தவர் சம்சுதீன். இவரது மனைவி பிதாகதுன்.
பாராளுமன்றத்தில் முத்தலாக் தடை சட்டம் நிறை வேறியதை அறிந்ததும் முபிதா மகிழ்ச்சி அடைந்துள்ளார். சக பெண் தோழிகளுடன் சேர்ந்து மகிழ்ச்சியை கொண்டாடி இருக்கிறார்கள்.
இதை அறிந்து சம்சுதீன் ஆத்திரம் அடைந்து இருக்கிறார். உடனடியாக மூன்று முறை தலாக் சொல்லி விவகாரத்து செய்து முபிதாவை வீட்டை விட்டு வெளியேற்றி இருக்கிறார்.
இதுபற்றி பிந்கி போலீசில் முபிதா புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்