search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்துக்குள்ளான வாகனம்
    X
    விபத்துக்குள்ளான வாகனம்

    உ.பி.யில் பேருந்து மீது கார் மோதல்- 7 பேர் பலி

    உத்தரபிரதேசத்தில் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் சிக்கி 7 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
    லக்னோ:

    உத்திரபிரதேச மாநிலத்தின் பிலிபிட் நகரில் உள்ள பேர்லி-பிலிபிட் தேசிய நெடுச்சாலையில் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரில் இரண்டு வயதே நிரம்பிய பச்சிளம் குழந்தை உள்பட் ஒரே குடும்பதை சேர்ந்த 8 பேர் பயணித்தனர். 

    கார் லாலூரிகேரா சவுக் என்ற பகுதியை கடந்த போது சாலையின் ஏதிரே வந்த பேருந்து மீது பயங்கர வேகத்தில் மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

    இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து படுகாயமடைந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 
    Next Story
    ×