search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாட்டின் முன்னேற்றத்துக்காக அனைவரும் உழைக்கவேண்டிய நேரம் இது- நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் வலியுறுத்தல்
    X

    நாட்டின் முன்னேற்றத்துக்காக அனைவரும் உழைக்கவேண்டிய நேரம் இது- நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் வலியுறுத்தல்

    நாட்டின் முன்னேற்றத்துக்காக அனைவரும் உழைக்கவேண்டிய நேரம் இது என இன்று நடைபெற்ற ஐந்தாவது நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
    புதுடெல்லி: 

    வருமானத்தை அதிகரிக்கும் வகையில் மாநில அரசுகள் ஏற்றுமதி துறையில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் 

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று ஐந்தாவது நிதி ஆயோக் கூட்டம்  நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் வருவாய் இலக்கை அதிகரிப்பதற்காக மாநில அரசுகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.



    தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    வரும் 2024-ம் ஆண்டுக்குள், 5 டிரில்லியன் டாலர் என்ற அளவிலான வளர்ந்த பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவதற்கான இலக்கு சவாலானது. எனினும், மாநிலங்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் இந்த இலக்கு அடையக் கூடியது தான். 

    வேலைவாய்ப்பு மற்றும் வருவாயை அதிகரிப்பதில் ஏற்றுமதி துறை முக்கியமானது; ஏற்றுமதியை அதிகரிப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். மக்களுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதே முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.

    2025-க்குள் நாட்டில் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜல்சக்தி துறை அமைச்சகம், தண்ணீர் விவகாரத்தில் ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்க உதவும். இதேபோல், நீர் மேலாண்மை மற்றும் சேமிப்பில் மாநில அரசுகளும் அக்கறை காட்ட வேண்டும்.

    2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் மீன்வளத்துறை, கால்நடை பண்ணை தொழில், தோட்டக்கலை, பழங்கள் மற்றும் காய்கறி விளைபொருட்கள் ஆகிய துறைகளின்மீது நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

    சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலை, உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா என தெரிவித்த மோடி, நாட்டின் முன்னேற்றத்துக்காக அனைவரும் உழைக்கவேண்டிய நேரம் இது என தெரிவித்தார். வறுமை, வேலையின்மை, வறட்சி, வெள்ளம், மாசுபாடு, ஊழல் மற்றும் வன்முறைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் .   

    இதேபோல், விவசாயிகள் நலன்சார்ந்த  மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் குறித்த நேரத்தில் விவசாயிகளை சென்றடைய வேண்டும்.  ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, வறட்சி உள்ளிட்டவற்றை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது" என கூறினார்.
    Next Story
    ×