search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதியில் ஜெகன்மோகன் ரெட்டி சாமி தரிசனம் செய்த காட்சி. அருகில் நடிகை ரோஜா மற்றும் கட்சி பிரமுகர்கள்.
    X
    திருப்பதியில் ஜெகன்மோகன் ரெட்டி சாமி தரிசனம் செய்த காட்சி. அருகில் நடிகை ரோஜா மற்றும் கட்சி பிரமுகர்கள்.

    ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதியில் சாமி தரிசனம்

    ஆந்திர முதல்வராக நாளை பொறுப்பேற்க உள்ள நிலையில் இன்று காலை ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.
    திருமலை:

    ஆந்திராவில் நடந்த பாராளுமன்றம், சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி நாளை ஆந்திர முதல்வராக பொறுப்பேற்கிறார். இதையொட்டி இவர் இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.

    விஜயவாடாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்த ஜெகன்மோகன் ரெட்டியை சித்தூர் கலெக்டர் பிரத்யும்னா, திருமலை - திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்கள் கட்சி தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

    அங்கிருந்து காரில் ஜெகன்மோகன் ரெட்டி ரேணிகுண்டா- தரக்கம்பாடி சாலை வழியாக அலிபிரி சென்று திருமலைக்கு வந்தார்.

    ஜெகன்மோகன் ரெட்டி வருகையையொட்டி வழி நெடுகிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கட்சியினர் பல முக்கிய சந்திப்புகளில் வரவேற்பு அளித்தனர்.

    நேற்று இரவு 7 மணியளவில் திருமலைக்கு வந்த ஜெகன்மோகன் ரெட்டியை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். பத்மாவதி கெஸ்ட் ஹவுஸ்சில் தங்கிய ஜெகன்மோகன் ரெட்டி இன்று காலை 7 மணியளவில் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தார்.

    அவருடன் நகரி தொகுதி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் சிலர் உடன் வந்தனர்.

    தரிசனம் முடிந்து வெளியே வந்த ஜெகன்மோகன் ரெட்டியை காண பக்தர்களும், கட்சி பிரமுகர்களும் முண்டியடித்து திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



    கடந்த ஆண்டில் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திரா முழுவதும் பாதயாத்திரை சென்றார். திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசித்து விட்டு தான் தனது பாதயாத்திரையை தொடங்கினார்.

    பாதயாத்திரை நிறைவடைந்த பிறகு திருமலைக்கு வந்து தனது வேண்டுதலை நிறைவேற்றினார்.

    தற்போது பாராளுமன்ற தேர்தல் சட்டமன்ற தேர்தலில் அதிக பெரும்பான்மையோடு வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார்.

    Next Story
    ×