search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துப்பாக்கி சண்டையில் உயிரிழந்த ராணுவ வீரர் ஜவான் பல்ஜீத் சிங்
    X
    துப்பாக்கி சண்டையில் உயிரிழந்த ராணுவ வீரர் ஜவான் பல்ஜீத் சிங்

    காஷ்மீரில் கடும் துப்பாக்கி சண்டை- ராணுவ வீரர், பயங்கரவாதி உயிரிழப்பு

    காஷ்மீரில் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்குமிடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் மற்றும் பயங்கரவாதி உயிரிழந்தனர். #JKEncounter

    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் நுழையும் பயங்கரவாதிகளை ராணுவம் வேட்டையாடி வருகிறது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு வருகிறார்கள். 

    இந்நிலையில் தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் ரத்னிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கும் தகவல் பாதுகாப்பு படைக்கு கிடைத்தது.

    இதையடுத்து இன்று அதிகாலை அந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு பயங்கரவாதிகளும் சுட்டனர். 

    நீண்ட நேரம் நடந்த இந்த சண்டையில் பயங்கரவாதி ஒருவரும், ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு ராணுவ வீரர் படுகாயம் அடைந்துள்ளார். அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #JKEncounter

    Next Story
    ×